வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஆண்மைக் குறைவின் முக்கிய காரணங்கள் : (மொத்தம் 14.)..

  1. ரத்தக்குறைவினால் உண்டான தாது நஷ்டம்.
  2. விந்து குறைவினால் அல்லது விந்துவின் சக்தி குறைவினால் உண்டான தாது நஷ்டம்.
  3. விந்து அசைவற்று உண்டாகும் தாது நஷ்டம்.
  4. இடையில் வெகுநாட்கள் மணவாழ்க்கையை தவிர்த்ததனால்   உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  5. மூளை பலகீனத்தால் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  6. ஈரல் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  7. இருதய உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  8. குண்டிக்காய் (கிட்னி ) உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  9. அவலச்க்ஷணம் அல்லது வியாதி உள்ள ஸ்திரிகள் சேர்க்கையால் or அருவருக்கத்தக்க  துர்கந்தமுள்ள ஸ்திரிகள் சேர்க்கையாலும்,மணவாழ்க்கையில் அருவருப்பு உண்டாயிருப்பதனால் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  10. விந்து தெளிந்து அல்லது நீர்த்துப் போவதனால் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  11. அழகிகள் or தன் மனதிற்கேற்ற ஒரு பெண்ணின் மேலேயே விருப்பத்தினால் மற்ற பெண்களிடத்தில் விருப்பம் எழாததனாலே உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  12. சொப்பன ஸ்கலிதம் அதிகப்படுவதினால் உண்டான ஆண்மைக்குறைவு.
  13. இந்திரிய இழிவினால் or இந்திரிய ஒழுக்கினால் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  14. விரைவாக விந்து வெளிப்படுவதினால்  உண்டாகும் ஆண்மைக்குறைவு.


 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

திங்கள், 28 ஜூலை, 2014

1. மன்மத லோக செந்தூரம்.

அனுபோக வைத்திய நவநீதம் பாகம் -1.


மன்மத லோக செந்தூரம்.


தூய்மை செய்த அரப்பொடி                           4 பலம்.(140 கிராம் ),

தூய்மை செய்த செம்மண் பூநாகம்            4 பலம்.(140 கிராம் ),

இவை இரண்டையும் ஆறு மணி நேரம் கைவிடாமல் அரைத்து ஒரு ஓட்டில் பரப்பி வைத்து மேலோடு மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 5 அடி சதுரப்புடம் போடவும்.புடம் ஆறியபின் மருந்தை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து முன்போல் 4 பலம் (140),தூய்மை செய்த பூநாகத்தைச் சேர்த்து 6 மணி நேரம் முன்போல் ஒரு ஓட்டில் பரப்பி வைத்து மேலோடு மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 5 அடி சதுரப்புடம் போடவும்.புடம் ஆறியபின் மருந்தை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து மறுபடியும் முன்போல் புடமிடவும் இப்படி 16 முறை
17 வது புடத்தில் பூநாகத்தை சேர்க்காமல் தனியே செந்துரத்தை மட்டும் கல்வத்திலிட்டு புளிப்பு மாதுளம் பழச்சாற்றை சிறுக சிறுக விட்டு 4 சாமம் (12மணி நேரம்) அரைத்து,சிறு பில்லைகளாகத் தட்டி வெயிலில் வைத்து நன்றாய் உலர்த்தி ஓட்டிலிட்டு மேலோடு மூடி ஏழு சீலைமண் செய்து ஈரமில்லாமல் உலர்த்தி இரண்டடி சதுர புடம் முன் போலிடவும்.இதில் பூநாகத்தின் தாமிரமுஞ் சேர்ந்து செந்துரமாகிக்கொண்டு வருகிற படியால் பூநாகத்திலுள்ள தாமிரத்துக்குத் தகுந்தபடி செந்ததூரமானது சுமார் 5 பலம் (175 கிராம் ) முதல் 6 பலம் (210 கிராம் ) வரையிலிருக்கும்.இது ஒரு அருமையான சிறந்த செந்தூரம்.
சாப்பிடும் அளவு : 2 முதல் 3 குன்றி மணி  எடை.

துணை மருந்து : வாதுமை அல்வா,தேன் ,நெய்,பாலேடு,வெண்ணெய்,ஆகியவை,போன்ற சத்துள்ள இளகம்.முதலியவைகளாம்.இச் செந்துரத்தை  உட்கொண்டவுடன் காச்சிய கற்கண்டிட்ட,பசுவின் பால் செரித்தல் திறனுக்கு ஏற்றவாறு ஒரு ஆழாக்கு வரையில் பருக வேண்டும். 

பயன்கள் : உடலில் நல்ல ரத்த முண்டாகி நரம்புகள் முறுக்கேறி உடல்வன்மை ஆண்மை சத்து ,உடல் சக்தி முதலியவைகள் அதிகரித்து வயோதிகநிலை போய் இளமை உண்டாகும்.இதன் பெருமையை இதை உண்டு அனுபவித்து வருகிறவர்கள் தாமே தெரிந்துக்கொள்ளக் கூடும்.ஒரு கற்ப மருந்துக்குச் சமமானது.இதனை ஒரு வருடத்தில் மூன்று மண்டலம்  உண்டுவந்தால்,எவ்வித நோயும் அணுகாமல் வச்சிர உடலுடையவர்களாக இருக்கலாம். 
             ஒரு கிராம் 500/-.  மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.